எனது புகைப்படம்
பெயர்: eeram sudum
இருப்பிடம்: tuty, maramangalam\ tamilnadu, India

normal living...

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

பிச்சை பாத்திரம்

நேரம் இல்லாததால் எழுத முடியவில்லை என்பதை சொல்ல கொஞ்சம் வெட்கமாத்தான் இருக்கு. இருந்தும் அதுதான் காரணம் என்பதும் உண்மை.
கடந்த வாரம் முழுக்க ஹைதராபாத் , கேரளா எ மாநிலம் விட்டு மாநிலம் பாய்ந்து வந்த அலைச்சல். கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது.

எல்லா மனிதர்களையும் நம்ப முடியவில்லை. இந்த பயணத்தில் உண்மையானவர்களாய் நினைத்தவர்கள் பொய்யாகவும், நம்ப முடியாமல் இருந்தவர்கள் நம்பிக்கையுடனும் நடந்து கொண்டது அனுபவமாக இருந்தது.

கடப்போம். இதுவும் கடந்து போகும் என்பது மன நிலையாக வைத்துக்கொள்ள ரொம்ப பொறுமையும் அவசியம்.

ஐந்து லட்சத்திற்கான காசோலை வாங்கிவந்தால் அது பணம் இல்லை என வங்கியிலிருந்து திரும்பி வந்துவிட்டது. இவ்வளவிற்கும் அந்த மனிதனுக்கு என்னாலான நிறைய உதவியும் செய்தேன். நன்றி இல்லை.

ஆனால் இன்னொரு மனிதனை நம்பாமல் இருந்தேன். ஆனால் அவன் நேர்மையாய் நடந்தான்.
இது மாதிரி நிறைய நடந்திருக்கு. இப்போ இதை இங்கே தொ வேற காரணம்.

லக்ஷ்மன் ஸ்ருதி சிக்னல் எனக்கு போகப் போக போதி மரம் மாதிரி ஆயிடும் போல. அந்த சிக்னல் ரொம்ப நேரம் ஆகும்... சிவப்பு க்ரீனா மாற...
நான் மெல்ல பைக்கை நிறுத்தி பெட்ரோல் மிச்சம்
பார்க்க முயன்றேன்.

என் முன் வாகனத்தில் ஒரு குழந்தையுடன் தம்பதி. ரொம்ப சுவாரசியமாக குழந்தையை கவனித்துக்கொண்டிருந்தேன். திடீரென சார் பசிக்குது காசு போடுங்கன்னு சட்டையை பிடிக்காத குரல்கள், பின்னாடியே இன்னும் நாலைந்து பேர். பார்க்கவே மனசிரங்கும் வித விதமா தோற்றத்தில் இருந்தார்கள். சிக்னல் விழுந்துவிடுமொவேன்ற பயத்திலும் வேக வேகமா சில்லறைகளை தேடி சத்தம் கேட்க போட்டுக்கொண்டிருந்தார்கள் வாகன வாசிகள். சத்தம் கேட்காமல் போட்டவர்கள் பெருமிதத்துடன் மற்றவர்கள் முகம் பார்த்தார்கள்.
சிலர் உள்ளுக்குள்ளேயே கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார்கள் போடலாமா? வேண்டாமா? என்று...

என்னை பொறுத்த வரையில் யாராவது ஏதாவது கேட்டால் நாம் கொடுக்காதிருப்பதே பாவம் என்று நினைப்பவன். காரணம் அந்த யாசகம் கேட்கும் நிலையில் கடவுள் நம்மை வைக்கவில்லையே என்ற நன்றி காட்ட ...

கேட்பதைவிட கொடுக்கமலிருப்பதே மிகப்பெரிய கேவலம் என்பதை சிறிய அளவில் பின்பற்றுவதுண்டு.

பெரிய தான தர்மம் செய்பவன் என நினைக்க வேண்டாம்.

ஒரு கவிதை எழுதி இருக்கேன்...

"பிச்சை போட மனசிருக்கு-
ஆனால் பிச்சைஎடுப்பவன்
தட்டில் கூட ஒரு ரூபா இருக்கு "

சில சமயம் ஒரு ரூபா காசில்லாம பக்கத்தில யாராவது வந்து நின்னா மனசு பதறும் பாருங்க. ரொம்ப அருவருப்பா இருக்கும்.

இருந்தால் செய்வது வழக்கம். அன்று வழக்கத்துக்கு மாறாக காசிருந்தும் போட மனசில்லை...

அந்த நாள் ரொம்ப கொடுமையானது தான்.

அந்த குழந்தை வைத்திருந்த பெண் என்னை ஏதோ மாதிரி பார்த்தாள்.

அதற்கு முந்தைய நாள் நடந்த ஒரு காட்சி தான் காரணம்.
பெர்பெக்ட் நடிகர்கள் அவர்கள் தான். நல்ல கரியை எடுத்து சட்டையிலும், முகத்திலும் கருப்படித்த மேக்கப். கால்களில் துணியை எடுத்து சுற்றி கையில் ஒரு கம்புடன் அவர்கள் நடிக்கும் நடிப்பு... கமல் ஃபூ..
கார் பிளிறிக்கொண்டு அருகில் வந்தாலும் அதே நடிப்புடன் அசைய மாட்டார்கள்...
பல நாட்களாக நானும் பரிதாப பட்டு போட்டிருக்கிறேன். நேற்று உண்மை அறியும் வரை. லக்ஷ்மன் ஸ்ருதியில் பார்த்த அவர்களை ஒரு தெரு தள்ளி நேற்று கருக்கலில் பார்க்க நேர்ந்து விட்டது. அதே மக்கள் நொண்டியும் நொடமுமா பிச்சைஎடுத்தவர்கள் ஆளுக்கு ரெண்டு வாட்டர் பாக்கெட் வாங்கி முகம் , கை, கால் கழுவி பிரெஷ் ஆகிக்கொண்டிருந்தார்கள். அருகே ரெண்டு பேர் பிச்சை எடுத்த காசு பங்கு பிரிக்க வாக்குவாதம் பண்ணிக்கொண்டிருந்தார்கள் !

நான் அந்த பக்கம் கிராஸ் செய்தவன் ஷாக் ஆகி வண்டியை நிறுத்தினேன். போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு கவனிக்க தொடங்கினேன். வாக்குவாதம் சண்டையாக கட்டி புரண்டார்கள். வண்டியை விட்டு இறங்கி போயி ரெண்டு பேரையும் இழுத்து விட்டேன் அறை... என் பக்கம சேர்ந்து திரும்பினார்கள்..

ஓத்தா... எந்த ஊருடா உங்களுக்கு? இளிச்ச வாயங்களாடா நாங்கள்லாம்.. அடுத்த ரோட்டுல பிச்சை எடுப்பீங்க.. இங்கே வந்து மேக்கப்ப கலைப்பீங்களாடான்னதும்... நிக்கவேயில்ல அஞ்சு பெரும் ஓட ஆரம்பிச்சாங்க..

இப்போ என்ன கேவலமா பாத்த அந்த பொண்ணு கிட்ட இந்த சம்பவத்தை எப்படி சொல்ல?

சைடுல நாலைந்து பேரை முடிச்சிட்டு அந்த பொண்ணை தாண்டி எம் பக்கமா வந்தான். சீக்கிரமா என்ன அடையாளம் தெரியல.. பக்கத்தில நெருங்கி வந்தவனுக்கு லேசா அடையாளம் புரிய, பதட்டம் வேகமா முகத்துல பரவ ஆரம்பிச்சது. அதற்குள் நானும் பைக்கை ஸ்டாண்ட் போடற மாதிரி இறங்கிக்கொண்டே "நேத்து விட்ட அறை வேணுமான்னு" கேட்டது தான் தாமதம் நொண்டினவன் கொஞ்சம் வேகமா நடையை போட்டான்.

இப்போ பிச்சை போட்ட அந்த பொண்ணு ஷாக். என்ன இவ்வளவு நேரம் பயங்கரமா நொண்டினவன் வேகமா நடக்கானேன்னு... அங்கே பிச்சை எடுத்த பசங்க யாருமே இல்ல.

வேதனை...

சல்லிக்காசுக்கு மனிதாபிமானத்தை அடகு வைக்கும் செயல்.
நான் பிச்சை எடுப்பவர்கள் மேல வச்சிருந்த ஈரம் ரொம்ப கடுமையாக சுட்டது.

பி. கு. எல்லாரும் அப்படி இருக்கப்போவதில்லை. வயதானவர்கள் யாராக இருந்தாலும் சாப்பாடு வாங்கி கொடுங்கள். அதை யாரும் இந்த கட்டுரையினால் நிறுத்த வேண்டாம்










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு