மானங்கெட்ட பொழப்பு!
குதிரை பேரங்கள் தொடங்கியாச்சி... கட்சிகள்... காட்சிகள் ... மாற்றம் அரங்கேறும் இனி...
இங்கேயிருந்து அடுத்த கிளைக்கு தாவுவதும், கிளைக்கு கிளை தாவுவதும் சகஜம். எதற்கு? நாட்டுக்கு நன்மை செய்யவா? போங்கப்பா.. காமெடி கீமெடி பண்ணாதீங்க...
யாரை தேர்வு செய்தாலும் என் நாடு கவலைப்படப்போவதில்லை... ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு அவசியமா என்ன?
எங்கள் தினம் -தினம் தொடங்கும். காலை அஞ்சு மணிக்கு எந்திச்சு பால்காரனை துரத்துவதிலிருந்து தொடங்கும்.
குளித்து எங்களை அலங்காரம் செய்து கொள்வோம். அலுவலகம் தேடிதேயத் தேய உழைப்போம் .
இந்த அரசியல் ஆர்வமெல்லாம் நாளிதழ்களோடு போய் படுத்துக்கொள்ளும்.
நாங்கள் முட்டாள்களா? இல்லை முட்டாள்களாக இருந்துகொள்ள முனைகிறோம்.
சமூக அக்கறை காற்றோடு போய் ரொம்ப வருசமாச்சு.
குடும்ப அக்கறை மட்டும் உண்டு. பொண்டாட்டி புள்ள நல்லா இருக்கணும். போதும்... இதுதான் இன்றைய மன நிலை.. நேற்று நாடு நல்லாயிருக்க குடும்பம் செத்த பல பேர்...
இன்று தடம் மாறி
குடும்பம் போதுமென சுய முகங்கள் மட்டுமே மேலோங்கி போனதற்கு காரணம் யாவரும் அறிந்ததே..
அறிந்தும் அறியாமல் செல்லும் காரணம் எதுவும் மாற்ற முடியாது எனும் நிலையா?
மனித வாழ்க்கையின் குறைந்த பட்ச நாட்களில் பணம் பதவி, ஆளுமை, ஈகோ, வசதிகள் மட்டுமே முன் நிற்கின்றன... ஆதலின், பின் நிற்பவர்கள் நிராதரவாகத்தான் இருக்கிறார்கள். மாற்ற போராட்டங்கள் எங்கேயும் இல்லை... அரசியல் கண் துடிப்பு பிரபகண்டாக்களைத் தவிர எந்த ஒரு மக்கள் போராட்டங்களும் நினைவிற்கு மறந்தே போனது.
அப்படியிருக்கும்போது மக்களின் எதிர் எண்ணங்களைப் பற்றி இங்கே எந்த அரசியல் தலைவர்களும் கவலைப்படப்போவதில்லை.
இங்குதான் எல்லாம் பழகிப்போய்விட்டதே...
போலீசா லஞ்சம் வாங்கும்... அரசியல் வாதிகளா கொள்ளை நிச்சயம் போன்ற எண்ணங்கள் மக்களோடு கலந்துவிட்டது...
இது பலருக்கு வசதியாகப் போய்விட்டது.
மகன் புகை பிடிப்பதை பார்த்துவிட்டால் தெரியாத மாதிரி போய்விட்டால் நல்லது. அல்லது மகன் நாளை நம் கண் முன்னாடியே தம் அடிப்பான். பயம் போய்விடும்.
அது மாதிரி இன்று குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் போய்விட்டது. சுய ஒழுக்கம், கட்டுக்கோப்பு பெரிய விசயமாக இல்லை.
ஆக, குற்றங்களுக்கு துணை போகும் அல்லது கண்டும் காணாமல் போகும் சமூக பொறுப்புணர்வு அற்ற நிலை. எந்த கடமை என்றாலும் எப்படியோ வேலை நடந்தால் சரி என்ற போக்கு?
அதுபோல் நாளை நடக்கப்போகும் தேர்தல் குதிரை பேரங்களில் யாருக்கும் எந்த கவலையும் இருக்கப்போவதில்லை. இந்த தடுமாற்றங்களுக்கு எந்த மாற்றமும் வரப்போகும் தேர்தல் கொண்டு வரப்போவதில்லை.
கண் மூடி ஓடும் எம் மக்கள் மாக்களாகி வெகு காலம் ஆயிற்று. அரசியல் சாக்கடை என ஒதுக்கி வைத்த கொண்டாட்டம் உங்களுக்கு உண்டு. எந்த கட்சியிலிருந்தும் நீங்க எங்கும் போகலாம். வரலாம்.
ஓட்டா? கவலையே வேண்டாம் எண்கள் கடமையை செய்வோம் உங்கள ஜெயிக்க வைப்போம்.
ஆனால் மறந்து விட வேண்டாம் உங்கள் மீது உமிழ எச்சில்கள் சேமிக்கப்படுகின்றன.
ஈரம் சுடும் காலம் வரும் நண்பர்களே!
எல்லா புரட்சிகளும் ஓர் இரவில்தான் பூத்திருக்கின்றன.
இங்கேயிருந்து அடுத்த கிளைக்கு தாவுவதும், கிளைக்கு கிளை தாவுவதும் சகஜம். எதற்கு? நாட்டுக்கு நன்மை செய்யவா? போங்கப்பா.. காமெடி கீமெடி பண்ணாதீங்க...
யாரை தேர்வு செய்தாலும் என் நாடு கவலைப்படப்போவதில்லை... ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு அவசியமா என்ன?
எங்கள் தினம் -தினம் தொடங்கும். காலை அஞ்சு மணிக்கு எந்திச்சு பால்காரனை துரத்துவதிலிருந்து தொடங்கும்.
குளித்து எங்களை அலங்காரம் செய்து கொள்வோம். அலுவலகம் தேடிதேயத் தேய உழைப்போம் .
இந்த அரசியல் ஆர்வமெல்லாம் நாளிதழ்களோடு போய் படுத்துக்கொள்ளும்.
நாங்கள் முட்டாள்களா? இல்லை முட்டாள்களாக இருந்துகொள்ள முனைகிறோம்.
சமூக அக்கறை காற்றோடு போய் ரொம்ப வருசமாச்சு.
குடும்ப அக்கறை மட்டும் உண்டு. பொண்டாட்டி புள்ள நல்லா இருக்கணும். போதும்... இதுதான் இன்றைய மன நிலை.. நேற்று நாடு நல்லாயிருக்க குடும்பம் செத்த பல பேர்...
இன்று தடம் மாறி
குடும்பம் போதுமென சுய முகங்கள் மட்டுமே மேலோங்கி போனதற்கு காரணம் யாவரும் அறிந்ததே..
அறிந்தும் அறியாமல் செல்லும் காரணம் எதுவும் மாற்ற முடியாது எனும் நிலையா?
மனித வாழ்க்கையின் குறைந்த பட்ச நாட்களில் பணம் பதவி, ஆளுமை, ஈகோ, வசதிகள் மட்டுமே முன் நிற்கின்றன... ஆதலின், பின் நிற்பவர்கள் நிராதரவாகத்தான் இருக்கிறார்கள். மாற்ற போராட்டங்கள் எங்கேயும் இல்லை... அரசியல் கண் துடிப்பு பிரபகண்டாக்களைத் தவிர எந்த ஒரு மக்கள் போராட்டங்களும் நினைவிற்கு மறந்தே போனது.
அப்படியிருக்கும்போது மக்களின் எதிர் எண்ணங்களைப் பற்றி இங்கே எந்த அரசியல் தலைவர்களும் கவலைப்படப்போவதில்லை.
இங்குதான் எல்லாம் பழகிப்போய்விட்டதே...
போலீசா லஞ்சம் வாங்கும்... அரசியல் வாதிகளா கொள்ளை நிச்சயம் போன்ற எண்ணங்கள் மக்களோடு கலந்துவிட்டது...
இது பலருக்கு வசதியாகப் போய்விட்டது.
மகன் புகை பிடிப்பதை பார்த்துவிட்டால் தெரியாத மாதிரி போய்விட்டால் நல்லது. அல்லது மகன் நாளை நம் கண் முன்னாடியே தம் அடிப்பான். பயம் போய்விடும்.
அது மாதிரி இன்று குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் போய்விட்டது. சுய ஒழுக்கம், கட்டுக்கோப்பு பெரிய விசயமாக இல்லை.
ஆக, குற்றங்களுக்கு துணை போகும் அல்லது கண்டும் காணாமல் போகும் சமூக பொறுப்புணர்வு அற்ற நிலை. எந்த கடமை என்றாலும் எப்படியோ வேலை நடந்தால் சரி என்ற போக்கு?
அதுபோல் நாளை நடக்கப்போகும் தேர்தல் குதிரை பேரங்களில் யாருக்கும் எந்த கவலையும் இருக்கப்போவதில்லை. இந்த தடுமாற்றங்களுக்கு எந்த மாற்றமும் வரப்போகும் தேர்தல் கொண்டு வரப்போவதில்லை.
கண் மூடி ஓடும் எம் மக்கள் மாக்களாகி வெகு காலம் ஆயிற்று. அரசியல் சாக்கடை என ஒதுக்கி வைத்த கொண்டாட்டம் உங்களுக்கு உண்டு. எந்த கட்சியிலிருந்தும் நீங்க எங்கும் போகலாம். வரலாம்.
ஓட்டா? கவலையே வேண்டாம் எண்கள் கடமையை செய்வோம் உங்கள ஜெயிக்க வைப்போம்.
ஆனால் மறந்து விட வேண்டாம் உங்கள் மீது உமிழ எச்சில்கள் சேமிக்கப்படுகின்றன.
ஈரம் சுடும் காலம் வரும் நண்பர்களே!
எல்லா புரட்சிகளும் ஓர் இரவில்தான் பூத்திருக்கின்றன.
